இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளது. இதையடுத்து கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஆறு ஐநா பள்ளிகளை 30 நாள்களுக்குள் மூடும்படி கடந்த மாதம் இஸ்ரேல் கல்வித்துறை மற்றும் காவல்துறை உத்தரவிட்டிருந்தது. இதற்காக காலக்கெடு நேற்று முன்தினம்(மே 7) முடிவடைந்ததையடுத்து கிழக்கு ஜெருசலேமில் உள்ள 6 ஐநா பள்ளிகள் நேற்று முதல் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் 800க்கும் மேற்பட்ட பாலஸ்தீன அகதி மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
The post 6 ஐநா பள்ளிகள் மூடல்; பாலஸ்தீன மாணவர்களின் கல்வி பாதிப்பு appeared first on Dinakaran.
