மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்கிறார். மாநாட்டு பிரகடன தீர்மானங்களை மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லாவும், பொது தீர்மானங்களை மாநில தலைமைச்செயலாளர் ராஜ்குமாரும் முன்மொழிகின்றனர். மாநாட்டில் திரளும் லட்சக்கணக்கான வணிகர்களின் வசதி கருதி, மதுராந்தகத்தில் 29 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது, இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் காஞ்சி மண்டல தலைவர் எம்.அமல்ராஜ், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரபாகர் ஆகியோர் தலைமையில் துரிதமாக நடந்து வருகிறது.
மே 5ம் தேதி 42வது வணிகர் தினம் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடாக நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள் மொத்த மற்றும் சில்லரை வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள், உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மதுராந்தகத்தில் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு தமிழகம் முழுவதும் 5ம்தேதி கடைகளுக்கு விடுமுறை: விக்கிரமராஜா அறிவிப்பு appeared first on Dinakaran.
