சாதிவாரி கணக்கெடுப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு

சென்னை: மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தது. இதை பல்வேறு கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்றனர். அந்தவகையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: ‘‘நீங்கள் மக்கள் கணக்கெடுப்பை முன்னெடுப்பதன் மூலம் அவர்களை பற்றி உண்மையாக புரிந்து கொள்வீர்கள்.

நேர்மையான முறையில், சமத்துவம் மற்றும் இதற்காக போராடி கௌரவிக்க படவேண்டிய தலைமுறைகள் அங்கீகரிக்கபடும்போது இந்த கணக்கெடுப்பு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக அமையும். சாதிவாரி கணக்கெடுப்பை பல நாட்களாக வலியுறுத்தி வரும் மநீம கட்சி ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறது. 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை போல அனைத்து தரவுகளையும் சேகரித்து அதை வெளியிடாமல் இருக்க கூடாது. உண்மை வெளிச்சத்தை பார்க்க வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

 

The post சாதிவாரி கணக்கெடுப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: