ஓடையில் விழுந்த டிரைவர் பலி

போடி, ஏப். 25: தேனி மாவட்டம், போடி அருகே, மேலச்சொக்கநாதபுரத்தில் உள்ள வடக்கு ராஜவீதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (64). இவரது மனைவி பர்வதம். இவர்களது மகன் பாபு (42). ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 18ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர், உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை மேலச்சொக்கநாதபுரம் பிரிவில் இருந்து ஊருக்கு செல்லும் மெயின் ரோட்டின் ஓரம், 10 அடி ஆழமுள்ள ஓடையில் ஒருவர் இறந்து கிடப்பதாக, போடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், தாலுகா போலீஸ் எஸ்.ஐ விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சென்று பார்த்தபோது, உடல் அழுகிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், ‘இறந்து கிடந்தவர் மாயமான பாபு என தெரிய வந்தது. மாயமான அன்று குடிபோதையில் ஓடைப்பள்ளத்தில் தவறி விழுந்து அடிபட்டு இறந்ததாக தெரிய வந்துள்ளது. இது குறித்து அவரது தந்தை ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ஓடையில் விழுந்த டிரைவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: