கொடநாடு வழக்கு சிபிசிஐடி போலீசில் சயான் ஆஜர்

கோவை: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் மறுவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சயானுக்கு கடந்த 17ம் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், உடல்நிலை சரியில்லாததால் ஆஜராக முடியவில்லை என்றும், 24ம் தேதி ஆஜராவதாகவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று காலை கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சயான் ஆஜரானார். அவரிடம் எஸ்பி மாதவன் மற்றும் ஏடிஎஸ்பி முருகவேல் ஆகியோர் பல்வேறு சந்தேகங்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

The post கொடநாடு வழக்கு சிபிசிஐடி போலீசில் சயான் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: