பாக்தாத்: சிரியாவில் பஷார் அசாத் வீழ்ச்சிக்கு பின் புதிய அதிபராக அல் ஷரா ஆட்சியை பிடித்தார். சுமார் 14 ஆண்டுகால உள்நாட்டு போருக்கு பின், தனது நாட்டை ஒன்றிணைத்து மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்ட ஒரு அரசியல்வாதியாக அவர் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார். கத்தாரில் ஈராக் மற்றும் சிரியா இடையிலான முன் அறிவிக்கப்படாத சந்திப்பை தொடர்ந்து சிரியா அதிபர் அல் ஷராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் மே 17ம் தேதி அரபு லீக் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அல் ஷராவுக்கு ஈராக் முறையாக அழைப்பை வழங்கியுள்ளது. அல் ஷரா கலந்து கொள்கிறாரா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
The post சிரியா புதிய அதிபருக்கு ஈராக் அழைப்பு appeared first on Dinakaran.