இந்நிலையில் தேவஸ்தான கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வராக கிறித்துவ மதத்தை சார்ந்த அசுந்தா என்பவர் பணிபுரிந்து வந்தார். அவரை அந்த பணியில் இருந்து விடுவித்து அதற்கு பதிலாக நரசிங்கபுரத்தில் உள்ள தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வழங்கியது.
ஆந்திர அரசு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் முதல் நபராக அசுந்தா மாற்றப்பட்டுள்ளார். மாற்று மதத்தை சேர்ந்த அசுந்தா, கல்லூரியில் வாராந்திர பூஜைகள் செய்ய யாரையும் அனுமதிப்பதில்லை என்றும், அவ்வாறு பூஜை நடந்தாலும் அதில் பங்கேற்காமல் விலகி வந்ததாகவும், குறிப்பாக பிரசாதங்களை புறக்கணித்து வந்ததாகவும் அவர் மீது பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
The post வேற்று மதத்தை சேர்ந்த திருப்பதி தேவஸ்தான கல்லூரி பெண் முதல்வர் இடமாற்றம் appeared first on Dinakaran.