கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு; 3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும்: சென்னை ஐகோர்ட்டில் சிபிஐ தகவல்


சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த ஆண்டு விஷ சாராயம் அருந்தி சுமார் 67 பேர் மரணம் அடைந்தனர். இந்த வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விஷசாராயம் தொடர்பான வழக்கு 3 மாதங்களில் விசாரித்து முடிக்கப்படும்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாமோதரன் மற்றும் கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்கள் 10 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளனர். நீதிமன்றம் விதிக்கக்கூடிய நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளோம் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் எத்தனை பேர் விசாரணையில் உள்ளனர்? என்பது தொடர்பாக பதிலளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு; 3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும்: சென்னை ஐகோர்ட்டில் சிபிஐ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: