5 நாட்கள் தொடர் சரிவுக்கு பிறகு தங்கம் விலை ஒரேநாளில் இரண்டு முறை உயர்வு

சென்னை: 5 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.1480க்கு உயர்ந்தது. 5 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,290க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.66,320 ஆகவும் விற்கப்பட்டது. இந்த அதிர்ச்சியை தாங்குவற்குள் நேற்று மாலை இரண்டாவது முறையாக தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,410க்கும், பவுனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு பவுன் ரூ.65,120க்கும் விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை ஏறி பவுன் ரூ.1480 உயர்ந்தது.

The post 5 நாட்கள் தொடர் சரிவுக்கு பிறகு தங்கம் விலை ஒரேநாளில் இரண்டு முறை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: