இந்நிலையில், நேற்று தங்கம் விலை ஒரே நாளில் மட்டுமே இரண்டு முறை உயர்ந்துள்ளது. காலையில் ரூ.520 உயர்ந்திருந்த நிலையில், மதிய வேளையில் தங்கம் விலை மீண்டும் ரூ.960 அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,290க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.66,320க்கும் விற்பனையானது. அதேநேரம் மதிய வேளையில் தங்கம் விலை மீண்டும் ரூ.960 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8410க்கும் சவரன் ரூ.67,280க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.150 உயர்ந்து ரூ.8,560க்கு விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் 2 நாட்களில் ரூ.2,680 அதிகரித்துள்ளது. அதேபோல சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் தங்க நகைகள் வாங்குவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post குறைந்த வேகத்தில் மீண்டும் எகிறிய தங்கம் விலை.. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 உயர்வு: இல்லத்தரசிகள் ஷாக்!! appeared first on Dinakaran.