ஜெட் வேகத்தில் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1200 உயர்ந்ததுஜெட் வேகத்தில் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1200 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று ஜெட் வேகத்தில் பவுனுக்கு ரூ.1200 உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த 5 நாட்களாக தொடர்ந்து சரிவை கண்டு வந்த தங்கம் நேற்று முன்தினம் முதல் அதிகரிக்க தொடங்கியது. அதாவது, நேற்று முன்தினம் ஒரே நாளில் காலை மற்றும் மாலை என 2 முறை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது.

அந்தவகையில் காலை கிராமுக்கு ரூ.65ம், பவுனுக்கு ரூ.520ம் உயர்ந்திருந்தது. அதேபோல், மாலையில் கிராமுக்கு ரூ.120ம், பவுனுக்கு ரூ.960ம் அதிகரித்து இருந்தது. அதன்படி, ஒரே நாளில் கிராமுக்கு ரூ.185, பவுனுக்கு ரூ.1,480ம் உயர்ந்து, ஒரு பவுன் ரூ.67,280க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை நேற்றும் உயர்ந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,560க்கும், பவுனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.68,450க்கு விற்பனையானது.

அதேபோல வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. அதாவது கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

The post ஜெட் வேகத்தில் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1200 உயர்ந்ததுஜெட் வேகத்தில் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1200 உயர்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: