நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பொன்னூரில் முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை

 

பந்தலூர், ஏப். 9: நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட நாடுகாணி பொன்னூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்களுக்கு நெல்லியாளம் நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததால் அப்பகுதி பெண்கள் நேற்று முன்தினம் காலி குடங்களுடன் கூடலூரில் இருந்து பந்தலூர் செல்லும் பிரதான சாலை பொன்னூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தேவாலா டிஎஸ்பி ஜெயபால் மற்றும் காவல்துறையினர் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நெல்லியாளம் நகராட்சிக்கு தெரிவித்து குடிநீர் வரவழைத்து குடிநீர் விநியோகம் செய்ததால் மக்கள் களைந்து சென்றனர்.

The post நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பொன்னூரில் முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: