‘நீட்’ பயிற்சி பெற்ற மாணவி தற்கொலை


சேலம்: சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியம், புதுப்பாளையம் பெரியமுத்தையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (43). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்திரா. இவர்களது மகள் சத்யா(18), மகன் துளசிநாத்.. சத்யா ஜலகண்டாபுரத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில், கடந்த 10 மாதமாக படித்து வந்தார். ஆனால், தன்னால் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என அடிக்கடி, தனது பெற்றோரிடம் கூறி புலம்பி வந்துள்ளார். அதற்கு பெற்றோர், உன்னால் முடிந்தவரை படி, முடியவில்லையென்றால் வேறு கல்லூரியில் சேர்த்து விடுகிறோம் என ஆறுதல் கூறி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 31ம் தேதி, சத்யா இரும்பு பவுடரை குடித்து மயங்கி விழுந்தார். இதையறிந்த செல்வராஜ், உடனடியாக மகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், தீவிர சிகிச்சை பலனில்லாமல் நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில், கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

The post ‘நீட்’ பயிற்சி பெற்ற மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: