ஊட்டியில் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

ஊட்டி, ஏப்.4: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் வரும் 25ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டம் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் கோரிக்கைகளை வரும் 7ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குநர், தபால் பெட்டி எண் 72, ஊட்டி 643001 என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்வதால் விவசாயிகள் விவசாயம் சம்பந்தமான குறைகள் இருப்பின், கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

The post ஊட்டியில் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: