சென்னையில் கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

சென்னை: பொதுவுடைமை புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஜெர்மனியில் பிறந்து உலகம் முழுவதும் வாழும் பாட்டாளிகளின் தோழராக உருவெடுத்த கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை எடுப்பது புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ்க்கு செய்யப்படும் பெரும் சிறப்பு என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார். இந்தக் கடமையை 18 ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி செய்திருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவரான கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் எனது முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.இராசா அவர்கள் திறந்து வைத்தார். பொதுவுடைமை புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற அரசின் முடிவு மிகவும் வரவேற்கத்தது என்று தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: