கரூர்- மதுரை பைபாஸ் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கரூர், மார்ச் 30: கரூர் மதுரை பைபாஸ் சாலையில் பெரியார் வளைவு அருகே சின்னாண்டாங்கோயில் பிரிவு அருகே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த சர்வீஸ் சாலையின் ஒரு பகுதியில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், அதிகளவு காற்றின் காரணமாக குப்பைகள் சாலையில் பரவி, வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

The post கரூர்- மதுரை பைபாஸ் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Related Stories: