கிருஷ்ணராயபுரம், மார்ச் 27: கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி ஊராட்சியில் தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பூச்சி விரட்டி மற்றும் பஞ்சகாவ்யம் தயாரிக்கும் முறைகள் குறித்த பயிற்சி வழங்கினர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மணவாசி ஊராட்சிக்குட்பட்ட கோரகுத்தி பகுதியில் முன்னோடி விவசாயி சுப்புராமன் தலைமையில் முசிறி எம்ஐடி வேளாண் கல்லூரி மாணவிகள் மதுமிதா, மதுமிதா, மான்சி, மகேஸ்வரி, மிதிலா, மைதிலி, நமிதா, நந்தனா ஆகியோர் சேர்ந்து கிராமப்புற பயிற்சி மூலம் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பூச்சி விரட்டி மற்றும் பஞ்சகாவ்யம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்பாட்டை எடுத்துரைத்தனர். இதில் சித்தலவாய் ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உப்பிடமங்கலம் பேரூராட்சி கவுன்சிலர் தமிழ்செல்வி (கருப்பூர்) மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post மணவாசி ஊராட்சியில் விவசாயிகளுக்கு பூச்சிவிரட்டி பஞ்சகாவ்யம் தயாரித்தல் பயிற்சி appeared first on Dinakaran.