கலெக்டர் அலுவலகத்தில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூர், மார்ச் 27: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும், மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் குறைகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விநியோகத்தை சீர்படுத்த வசதியாக கரூர் எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை (28ம் தேதி) மார்ச் 28ம்தேதி மாலை 4 மணியளவில் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் நுகர்வோர்கள் கலந்து கொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலெக்டர் அலுவலகத்தில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: