விருதுநகரில் சட்டக்கல்லூரி வேண்டும்: ஏஆர்ஆர்.சீனிவாசன் எம்எல்ஏ கோரிக்கை

 

விருதுநகர், மார்ச் 28: விருதுநகரில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என, ஏஆர்ஆர்.சீனிவாசன் எம்எல்ஏ சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். விருதுநகர் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் சட்டமன்றத்தில் பேசியதாவது: சிவகாசி எரிச்சநத்தம் பஸ் நிலையத்தில் புதிய நவீன சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். விருதுநகரில் அருப்புக்கோட்டை-அல்லம்பட்டி முக்குரோடு முதல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை தார் ரோடு அகலப்படுத்த வேண்டும்.

விருதுநகரில் அய்யனார் நகர் போலீஸ் பாலத்தை மேல்மட்ட பாலமாக உயர்த்தி கட்ட வேண்டும். கவுசிகா ஆற்றின் இருகரைகளிலும் நான்கு வழிச்சாலை, கலைஞர் நகர் முதல் அல்லம்பட்டி வரை தார் ரோடு அமைக்க வேண்டும். விருதுநகர் மருத்துவக்கல்லூரி அருகில் விபத்து தலைக்காய சிகிச்சை பிரிவான டிராமா கேர் மருத்துவமனை அமைக்க வேண்டும்.

விருதுநகர் கன்னிசேரிபுதூர், சிவகாசி எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களை தாலுகா மருத்துவமனைகளாக தரம் உயர்த்த வேண்டும். விருதுநகர் வடமலைக்குறிச்சி, சங்கரலிங்கபுரம் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்து தர வேண்டும். மாவட்ட தலைநகரில் சட்டக்கல்லூரி, அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

The post விருதுநகரில் சட்டக்கல்லூரி வேண்டும்: ஏஆர்ஆர்.சீனிவாசன் எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: