பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 27: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கூட்டம், தலைவர் முத்து முகம்மது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் வேல்ச்சாமி வரவேற்றார். நிகழ்வில் பள்ளியில் படிக்க கூடிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும், அடுத்த கல்வி ஆண்டில் அதிகப்படியான மாணவர்களை பள்ளியில் சேர்த்து மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாக, பொதுமக்களிடையே அரசு பள்ளிகளில் சேர்த்து படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் தவக்கல் ஜெயினூலாபுதீன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: