ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

காரைக்குடி, மார்ச் 27: காரைக்குடியில் ஏஐடியூசி தெருவோர வியாபார்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநகர் ஒருங்கிணைப்பபாளர் தர், ஆதி, அப்பாஸ், ரவிச்சந்திரன், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி ரோடு மார்ஜின் வசூல் மாநகராட்சியை நடத்த வேண்டும். வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்க வேண்டும். தெருவோர வியாபாரிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும். தெருவோர வியாபாரிகளிடம் குத்தகைதாரர்கள் வசூல் செய்யும் பணத்திற்கு ரசீது தர வேண்டும். குத்தகைதாரர்கள் அதிக வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சாத்தையா, மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன், ஏஐடியூசி மாநில துணைத்தலைவர் மீனாள், மாவட்ட தலைவர் காளைலிங்கம், மாவட்ட பொருளாளர் மணவழகன், மாவட்ட துணைச்செயலாளர் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் சிவாஜிகாந்தி, ஒலி ஒளி சங்க மாவட்ட அமைப்பாளர் முத்துசரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஏஐடியூசி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: