போச்சம்பள்ளி, மார்ச்27: கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (38). இவர் ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, அதில் மக்கள் கணினி மையம் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ் (37). இவர் நேற்று முன்தினம், மது போதையில் சின்னசாமியின் கணினி மையத்திற்கு சென்று, அங்கிருந்த சின்னசாமியிடம் ஊராட்சி கட்டிடத்தில் உள்ள கடையை, உனக்கு யார் வாடகைக்கு விட்டது என கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கி உள்ளார்.
இதில் படுகாயமடைந்த சின்னசாமியை மீட்ட அக்கம்பக்கத்தினர், மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில், மத்தூர் போலீசார், விமல்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கணினி மைய உரிமையாளரை தாக்கியவர் மீது வழக்கு appeared first on Dinakaran.