போச்சம்பள்ளி, மார்ச் 29: மத்தூர் அருகே உள்ள சோனாரஹள்ளி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக, மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போது, அங்கு சிலர் சூதாடிக்கொண்டு இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயற்சித்தனர். போலீசார் அவரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், அவர்கள் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(37), மோட்டூரை சேர்ந்த பிரகாஷ்(36), கே.எட்டிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன்(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், ₹25 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
The post சூதாடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.