மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

கிருஷ்ணகிரி, மார்ச் 30: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த உள்ளுக்குறுக்கி பகுதியை சேர்ந்தவர் அல்லா பகாஸ். இவரது மகன் உபேஸ்(19). இவர் அதே பகுதியில் உள்ள பெரியப்பாவின் எலக்ட்ரிக்கல்ஸ் கடையில் பணியாற்றி வந்தார். கடந்த வியாழக்கிழமை மாலை, அந்த பகுதியில் உள்ள மசூதியில் எலக்ட்ரிக் வேலையில் உபேஸ் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ராயக்கோட்டை போலீசார், அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: