புதிய பொதுக்கழிப்பிடம் திறப்பு

ஊட்டி, மார்ச் 27: ஊட்டி காந்தல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய கழிப்பிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி காந்தல் பகுதியிலும் புதிதாக கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி மற்றும் கமிஷனர் ஸ்டேன்லி பாபு ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், காந்தல் வார்டு கவுன்சிலர் கீதா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மற்றும் கவுன்சிலர் ஜார்ஜ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post புதிய பொதுக்கழிப்பிடம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: