2018ம் ஆண்டு முதல் இந்நாள் வரை 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவுத் துறையினுடைய இணையதள பக்கத்தில் உள்சென்று திருமணப் பதிவிற்கு தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அதற்கு உரிய கட்டணத்தை செலுத்திய பின்னர், விண்ணப்பம் உருவாக்கப்படும். அதனை அச்சுப் பிரதி எடுத்து திருமண பதிவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட திருமண சான்றிதழில் திருத்தம் தேவைப்படினும் பதிவுத் துறை அலுவலகங்களுக்கு நேரிலே வராமல் இணையம் வழியாகவே விண்ணப்பித்து திருத்திய சான்றிதழைப் பெறும் வசதியும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
The post 12,000 சுயமரியாதை திருமணங்கள் பதிவு: அமைச்சர் பி.மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.