காலர் ஐடி செயலியின்றி அழைப்பவர் பெயரை அறிய ஏற்பாடு..!!

டெல்லி: செல்போனில் அழைப்பவர் யார் என ட்ரூகாலர் உள்ளிட்ட செயலிகள் உதவியின்றி தெரிந்து கொள்ள நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளனர். எச்பி, டெல், எரிக்சன், நோக்கியாவுடன் இணைந்து ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்கள் மென்பொருளை உருவாக்குகின்றன. சிம் கார்டு சேவை நிறுவனங்கள் ஏற்கனவே இதுதொடர்பாக பரிசோதனைகளை மேற்கொண்டுவிட்டன. அனைத்துகட்ட பரிசோதனைகளும் முடிந்த பிறகு விரைவில் செயலிகள் உதவியின்றி அழைப்பவர் பெயரை அறியலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

The post காலர் ஐடி செயலியின்றி அழைப்பவர் பெயரை அறிய ஏற்பாடு..!! appeared first on Dinakaran.

Related Stories: