3 நக்சல்கள் என்கவுன்டரில் பலி

தண்டேவாடா: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 3நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரின் தண்டேவாடா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள காட்டுப் பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர்.

அப்போது பாதுகாப்பு படையினர் மீது நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டனர். வீரர்கள் கொடுத்த பதிலடியில் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உயிரிழந்த நக்சல்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து நக்சல் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

The post 3 நக்சல்கள் என்கவுன்டரில் பலி appeared first on Dinakaran.

Related Stories: