இது குறித்து பூபேஷ் பாகேல் அலுவலகம் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘இப்போது சிபிஐ வந்துவிட்டது. ஏப்ரல் 8 மற்றும் 9ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் ஏஐசிசி கூட்டத்திற்காக அமைப்பக்கப்பட்ட வரைவுக்குழு கூட்டத்திற்காக பூபேஷ் பாகேல் டெல்லி செல்ல இருந்தார். ஆனால் அதற்கு முன் சிபிஐ ராய்ப்பூர் மற்றும் பிலாய் வீடுகளுக்கு வந்துவிட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மாநில தலைவர் தீபக் பைஜ் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘சிபிஐ எங்களது இரு தலைவர்களின் வீடுகளில் முகாமிட்டுள்ளது. இது அரசின் விரக்தியை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். காங்கிரஸ் ஒருபோதும் தலை வணங்காது. இந்த போராட்டம் தலைவர்களை பற்றியது மட்டுமல்ல. அதிகாரத்தால் நசுக்க முயற்சிக்கப்படும் ஒவ்வொரு உண்மையை பற்றியது என்பதை பாஜ நினைவில் கொள்ள வேண்டும். உண்மை தலைவணங்காது அநீதிக்கு முடிவு நிச்சயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ரூ.6000 கோடி மகாதேவ் ஆப் மோசடி சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீட்டில் சிபிஐ சோதனை appeared first on Dinakaran.