சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரிக்குள் போலீசார் மீது மாணவர் அமைப்பு தாக்குதல்

சென்னை: சென்னை தரமணி தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரிக்குள் போலீசார் மீது மாணவர் அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளனர். மாணவிகள் 2பேர் மீது தர்மாம்பாள் பாலிடெக்னிக் நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் திடீரென கல்லூரிக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிக்குள் திடீரென நுழைந்த போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்தப்பட்ட மாணவர் அமைப்பை சேர்ந்த சிலர் போலீசாரை தாக்கினார்.

The post சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரிக்குள் போலீசார் மீது மாணவர் அமைப்பு தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: