நடைபயணமாக ஜெயின் சாமியார்கள் புதுச்சேரி வருகை

 

புதுச்சேரி, மார்ச் 24: நடைபயணமாக புதுச்சேரிக்கு வந்த ஜெயின் சாமியார்களுக்கு ஜெயின் சமூகத்தினர் வரவேற்பு அளித்தனர். மத்திய பிரதேசத்தில் இருந்து ஜெயின் சாமியார்கள் புரன் சாகர்ஜி, சரஸ்வத் சாகர்ஜி, நமி சாகர்ஜி ஆகியோர் நாடு முழுவதும் ஜெயின் கோயில்களுக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி, 3 ஜெயின் சாமியார்களும் பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து, அங்கிருந்து சென்னை வழியாக நேற்று காலை 8.30 மணியளவில் புதுச்சேரிக்கு நடைபயணமாக வந்தனர்.

இதில் புதுச்சேரியை சேர்ந்த ஜெயின் சமூகத்தினர் அவர்களை வரவேற்று நடைபயணத்தில் கலந்துகொண்டனர். சாரம் பாலாஜி நகரில் உள்ள ஜெயின் கோயிலில் அவர்கள் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றனர். தகவலறிந்த ஜெயின் சமூகத்தினர், பெண்கள் பலரும் அங்கு வந்து சாமியார்களிடம் ஆசிபெற்று சென்றனர். புதுச்சேரியில் 4 நாட்கள் தங்கும் சாமியார்கள், மற்ற 2 ஜெயின் கோயில்களுக்கும் இதேபோல் சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றனர்.

The post நடைபயணமாக ஜெயின் சாமியார்கள் புதுச்சேரி வருகை appeared first on Dinakaran.

Related Stories: