சென்னை : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்துக்குப் பின் திமுக எம்.பி. கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “இந்திய அரசியல் வரலாற்றில் இந்த கூட்டம் ஒரு மைல்கல். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒருமித்த கருத்தை வலியுறுத்தினர். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வலியுறுத்தி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுவரையறை குறித்து வெளிப்படைத் தன்மையுடன் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வலியுறுத்தி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம்!! appeared first on Dinakaran.