காஷ்மீரில் வீரமரணம் தமிழக ராணுவ வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் குளத்து தெருவை சேர்ந்தவர் ஜீவகன், ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவரது மகன் வினோத்குமார்(49). காஷ்மீர் பகுதியில் 62வது படைத்தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நர்மதா(45) என்ற மனைவியும், ரஷிதா(18), கீர்த்தனா(15) என்ற 2 மகள்களும் உள்ளனர். கடந்த 18ம்தேதி மாலை 3.49 மணியளவில் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் வினோத்குமாரின் வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது.

அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் வீரமரணம் அடைந்தார். இவரது உடல் நேற்று அதிகாலை சொந்த ஊரான வெம்பாக்கத்திற்கு ராணுவ வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு செய்யாறு சப்-கலெக்டர் பல்லவிவர்மா, ஏடிஎஸ்பி சிவனுபாண்டி, 62வது ராணுவ பிரிவு தலைமை அலுவலர் ஈஸ்வரசிங் மற்றும் ஏராளமான கிராம மக்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து 11 மணியளவில் ராணுவ வீரர் வினோத்குமாரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.  பின்னர் அவரது உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி, கும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடந்து வெம்பாக்கம் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.

The post காஷ்மீரில் வீரமரணம் தமிழக ராணுவ வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம் appeared first on Dinakaran.

Related Stories: