அப்போது அரசு தரப்பில், கலெக்டர் ஆஜராகி உள்ளதால் வழக்கை விரைந்து விசாரணை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதி பட்டு தேவானந்த், ‘‘சட்டத்திற்கு முன் அனைவரும் சமமே. வழக்கு வரிசைப்படி வரும். அதுவரை கலெக்டர் காத்திருக்கட்டும்’’ என்றார்.
இதனைத் தொடர்ந்து, காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நீதிமன்றத்தில் காத்திருந்த பிறகு அவரது வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டால் தான் நீங்கள் கோர்ட் உத்தரவை மதிக்க வேண்டுமா? காலதாமதமாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதற்கான உரிய காரணத்தை கூறுங்கள்’’ என்று கேட்டு இறுதியில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
The post நீதிமன்றத்தில் கலெக்டர் ஆஜர் appeared first on Dinakaran.