எம்.எப்.ஹூசைனின் ஓவியம் ரூ.118 கோடிக்கு விற்பனை

புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற ஓவிய கலைஞர் எம்.எப்.ஹூசைன். இவரது பெயரிடப்படாத ஓவியம் (கிராம் யாத்ரா) அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 19ம் தேதி நடந்த கிறிஸ்டி ஏலத்தில் பங்கேற்றது. அவரது படைப்பானது ரூ.118கோடிக்கு ஏலம் போயுள்ளது. இது நவீன இந்திய கலையின் மிகவும் விலையுயர்ந்த படைப்புக்கான புதிய சாதனையாகும். இது முந்தைய சாதனையான அமிர்தா ஷெர்-கில்லின் தி ஸ்டோரி டெல்லர் படத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். கடந்த 2023ம் ஆண்டு மும்பையில் நடந்த ஏலத்தில் இது ரூ.61.8 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை தற்போது ஹூசைனின் படைப்பு முறியடித்துள்ளது.

The post எம்.எப்.ஹூசைனின் ஓவியம் ரூ.118 கோடிக்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: