திருவட்டார் அருகே கடன் கொடுக்காததால் தொழிலாளி மீது கல்வீசி தாக்குதல்

திருவட்டார், மார்ச் 20 : திருவட்டார் அருகே கொல்லம்விளை செங்கோடி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன்(50). அதே பகுதியை சேர்ந்தவர் சில்வான்ஸ்(40). 2 பேரும் ஒன்றாக கேரளாவில் தங்கி தேன் எடுக்கும் தொழில் செய்து வந்தனர். அங்கு வேலை முடிந்து ஊருக்கு வந்தனர். தற்போது சொந்த ஊரில் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சில்வான்ஸ், சுகுமாரனிடம் கடனுக்காக பணம் கேட்டு உள்ளார். பணம் இல்லை என்று சுகுமாரன் கூறியுள்ளார். இதில் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சில்வான்ஸ் அந்த பகுதியில் கிடந்த ஒரு கல்லால் சுகுமாரனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சுகுமாரன் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திருவட்டார் போலீசார் சில்வான்ஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவட்டார் அருகே கடன் கொடுக்காததால் தொழிலாளி மீது கல்வீசி தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: