சென்னை: சென்னை கோட்டூர்புரம் இரட்டைக் கொலை வழக்கில் 12 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டனர். சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று ரவுடிகள் 2 பேரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடினர். முக்கிய குற்றவாளியான ரவுடி சுக்குகாபி சுரேஷ் மீது சென்னையில் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.