விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த கஞ்சாவை ஆதம்பாக்கத்தை சேர்ந்த அஸ்வினிடம் இருந்து வாங்கி விற்பனை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அபிஷேக், அஸ்வின் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி, காவல்துறையின் தரப்பில் கூறிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபடவில்லை. எனவே குற்றச்சாட்டு பலன்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீர்ப்பளித்தார்.
The post கஞ்சா விற்றதாக வழக்கு வயதான தம்பதி விடுதலை appeared first on Dinakaran.