சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து லாரி கொழுந்துவிட்டு எரிந்ததால் 6 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் லாரியின் அருகில் நின்றிருந்த இரண்டு சரக்கு வாகனங்கள், மூன்று இரு சக்கர வாகனங்கள் மற்றும் 6 கடைகள் தீயில் எரிந்து சேதமாகின. அந்தப் பகுதியில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு நள்ளிரவு முதல் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அந்த பகுதியில் பொதுமக்கள் செல்லாதவாறு தடையை ஏற்படுத்தினர். மேலும் கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகிலும் சம்பவம் நடந்த இடத்தை சுற்றிலும் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நள்ளிரவு சம்பவ இடத்துக்கு வந்து போலீசாரிடம் விசாரணை நடத்தினார். தீப்பிடித்து எரிந்த லாரியில் மீதம் இருக்கும் கச்சா எண்ணெயை மற்றொரு டேங்கர் லாரிக்கு பத்திரமாக மாற்றப்பட்டது. மேலும் லாரி தீ பிடிக்காமல் இருக்க கச்சா எண்ணெய் மாற்றும்போது அந்த டேங்கர் லாரி மீது தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். டேங்கர் லாரி எரிந்த போது அங்கிருந்து மின்சார ஒயர்களும் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்களும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் முதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கடலூர் முதுநகரில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்து பயங்கர விபத்து: 6 கடைகள், 5 வாகனங்கள் தீக்கிரையானது appeared first on Dinakaran.