குலசேகரன்பட்டினம் கோயிலில் முத்தாரம்மன் சப்பர வீதியுலா

 

உடன்குடி, மார்ச் 13: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மாசி மாத கடைசி செவ்வாய்க்கிழமை முன்னிட்டு அம்மன் சப்பர வீதியுலா நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 2 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து முத்தாரம்மன் சப்பரத்தில் வீதியுலா வந்து காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

 

The post குலசேகரன்பட்டினம் கோயிலில் முத்தாரம்மன் சப்பர வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: