அவர்கள் அறிவுறுத்தலின்படி விமானம் மீண்டும் காலை 10.25 மணியளவில் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் சோதனை செய்தனர். ஆனால் வெடி பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் செல்ல இருந்த பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விமானம் இன்று காலை 5 மணிக்கு மீண்டும் நியூயார்க் புறப்பட்டு செல்லும் என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரையிறக்கம் appeared first on Dinakaran.
