மகாகும்பமேளா நிறைவடைந்து 12 நாள்களான நிலையில் தற்போதும் ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தருகின்றனர். இதுகுறித்து சில பக்தர்கள் கூறுகையில், “பக்தர்கள் கூட்டம் காரணமாக மகாகும்பமேளாவுக்கு செல்ல முடியாமல் போனது ஏமாற்றம் தந்தது. அதனால் இப்போது வந்து சங்கமம் பகுதியில் புனித நீராடினோம். இப்போது இங்குள்ள மாலை நேர வானிலை, கும்பமேளாவையொட்டி வைக்கப்பட்ட அலங்கார விளக்குகள் போன்றவை மகாகும்பமேளா இன்னும் நடப்பது போன்ற மகிழ்ச்சியை தருகிறது” என்றனர்.
The post மகா கும்பமேளா நிறைவடைந்தும் சங்கம் பகுதிக்கு வந்து புனித நீராடும் பக்தர்கள் appeared first on Dinakaran.
