இதையடுத்து அங்கு பெரும் கூட்டம் கூடியுள்ளது. இதுகுறித்து எனது மகள் என்னிடம் தெரிவித்தார். இதே கும்பல் கடந்த 24ம் தேதியன்று ஜல்காவில் நடந்த நிகழ்ச்சியில் பொது இடத்தில் வைத்து தன்னிடமும், தனது தோழிகளிடமும் சீண்டலில் ஈடுபட்டதாகவும் என் மகள் தெரிவித்தார். இதே கும்பல், முக்தாய் நகரில் பள்ளிக்கு செல்லும் சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்து வருவதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே இதுபற்றி போலீசில் புகாரளித்தேன். முதல்வர் மற்றும் போலீஸ் டிஎஸ்பியை சந்தித்து பேசவுள்ளேன். இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக அனிகெத் போய், பியூஷ் மோரே, சாஹம் கோலி, அனுஜ் பாட்டீல், கிரண் மாலி மற்றும் சச்சின் பால்வி உள்ளிட்ட வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.
The post மகாராஷ்டிராவில் ஒன்றிய பெண் அமைச்சர் மகளுக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது; 6 பேருக்கு வலை appeared first on Dinakaran.
