தர்மபுரி அருகே தொழிலாளி மர்மச்சாவு

தர்மபுரி, பிப்.28: தர்மபுரி அருகே, கிருஷ்ணாபுரம் திப்பம்பட்டி கள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் சங்கர்(43). கார்பெண்டரான இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். லாவண்யா, திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து டெய்லரிங் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், மனைவியை பிரிந்த வேதனையில் குடிக்கு அடிமையான சங்கர், கடந்த 25ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் ேதடி வந்த நிலையில், காரிமங்கலம்-திப்பம்பட்டி ரோட்டில் தனியார் மில் அருகே பாலத்திற்கு அடியில் சங்கர் சடலமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், கிருஷ்ணாபுரம் போலீசார் விரைந்து சென்று, சங்கரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post தர்மபுரி அருகே தொழிலாளி மர்மச்சாவு appeared first on Dinakaran.

Related Stories: