இந்த நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டு இருப்பதன் மூலம் சமூக நீதியை மேம்படுத்துவதில் சிறந்த முன்னேற்றம் அடைந்து வருகிறோம் என்பதை உணர்த்துகிறது. சமத்துவ சமுதாயத்தின் மைல் கல்லாக இந்த நீதிமன்றம் அமைகிறது. நீதிமன்றங்கள் என்பது சாதாரண கட்டிடம் அல்ல. அனைவருக்கும் சம தர்மம், சம நீதி, மனித நலம் போன்றவற்றுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. நமது உரிமைகளை மீட்டெடுக்க நீதிமன்றங்கள் உள்ளன என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்க வேண்டும். சமூக நீதி ஊக்குவிக்கப்பட வேண்டும். அனைவரும் சமம் என்பது நீதித்துறையின் கோட்பாடு ஆகும். இன்றைய நவீன யுகத்தின் முன்னோடியாக திருக்குறள் விளங்குகிறது. திருக்குறளின் 111 வது குறள் அறத்தை வலியுறுத்துகிறது. தகுதி எனவொன்று நன்றே பகுதியால், பாற்பட்டு ஒழுகப் பெறின் என்பது இந்த குறள் ஆகும். அறத்தின் வழி நின்று பகை, நட்பு, அயலார் ஆகிய மூவிடத்திலும் வேறுபாடு இன்றி நடத்தலே அவசியம் என திருவள்ளுவர் வலியுறுத்தி உள்ளார். நீதி வழங்குவதில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, திருவள்ளுவர் வழிகாட்டி விட்டார். ஒவ்வொரு பிரிவு மனிதருக்கும் சம வாய்ப்பு கிடைத்தால் அதுவே சிறந்த அறமாகும். அந்த அறம் போற்றப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
The post நவீன யுகத்தின் முன்னோடி திருக்குறள் அறத்தின் வழி நின்று நீதி நிலைநாட்ட வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.
