நாடாளுமன்ற தேர்தலின்போது, ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி சேர விரும்பினார். ஆனால் அன்புமணி, பாஜவுடன் கூட்டணி சேர்ந்தே ஆகவேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கடைசி நேரத்தில் பாமக, பாஜவுடன் கூட்டணி சேர்ந்தது. இந்நிலையில் சமீபத்தில் கட்சி நிர்வாகிளிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், கூடா நட்புகேடாக முடிந்ததாக கூறியுள்ளார். இதனால் இம்முறை அதிமுகவுடன் கூட்டணி சேர அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.மணியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகிறார்கள். அதே நேரத்தில் அவரது மைத்துனரின் மகனுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றதாக பாமகவினர் கூறினர். இதை தொடர்ந்து மாஜி அமைச்சரான வேலுமணி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நீண்டநேரம் பேசினார்.
The post எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.மணி திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.
