கோடியக்காட்டில் சந்தனக்கூடு பெருவிழா

 

வேதாரண்யம், பிப். 16: வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் மஹான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்க்காவின் சந்தனக்கூடு விழா நடந்தது.முன்னதாக கோடியக்காடு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இருந்து வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்க்காவை வந்தடைந்தது. அதிகாலை மஹானின் ரவ்ல சரீபுக்கு சந்தனம் பூசப்பட்டது. இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழா ஏற்பாடுகளை கோடிக்கரை, கோடியக்காடு ஜமாத்தார்கள் மற்றும் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்இதில் கோடியக்காடு, கோடியக்கரை கிராமவாசிகள், ஜமாத்தார்கள், இந்து ,கிறிஸ்தவர்கள் உள்ளிடோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கோடியக்காட்டில் சந்தனக்கூடு பெருவிழா appeared first on Dinakaran.

Related Stories: