கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி கைது

சேலம், பிப்.12: சேலம் அழகாபுரம் பெரியபுதூர் நந்தவனம் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(23). ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்பட 8 வழக்குகள் இருக்கிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள படையப்பா நகர் பகுதியில் நடந்துவந்து கொண்டிருந்த தண்டபாணி(25) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ₹1200 ரூபாயை பறித்து சென்றுவிட்டார். இதுகுறித்து அழகாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார், ரவுடி சந்தோஷ்குமாரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: