அதிமுகவில் அடுத்தடுத்து வெடிக்கும் அதிருப்தி, தொண்டர்கள் அதிர்ச்சி

சென்னை : அதிமுகவில் அடுத்தடுத்து |அதிருப்தி வெளிப்படுவதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைக்காததால் எடப்பாடி நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்று அதிமுக மாஜி அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை புறக்கணித்ததால் விழாவுக்கு செல்லவில்லை. நாங்கள் எம்.ஜி.ஆர்.. ஜெயலலிதா ஆகியோரால் அடையாளம் காணப்பட்டவர்கள். அழைப்பிதழ், பேனர்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் விழாவை புறக்கணித்தேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post அதிமுகவில் அடுத்தடுத்து வெடிக்கும் அதிருப்தி, தொண்டர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: