காங்கிரசை தொடர்ந்து பஞ்சாப் தேர்தலை ஒத்திவைக்க பாஜ., சிரோன்மணி கோரிக்கை

அமிர்தசரஸ் : உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரையில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. உபி.யில் 7 கட்டங்களாகவும், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவாவில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.இந்நிலையில், பஞ்சாப்பில் பிப்ரவரி 16ம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தேர்தலை குறைந்தப்பட்சம் 6 நாட்களாவது ஒத்திவைக்கும்படி இம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் ( காங்கிரஸ்), பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பாஜ.வும் அதன் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளமும் (சம்யுக்த் பிரிவு) நேற்று இதே கோரிக்கை வலியுறுத்தின….

The post காங்கிரசை தொடர்ந்து பஞ்சாப் தேர்தலை ஒத்திவைக்க பாஜ., சிரோன்மணி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: